இந்தியாவில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு,ஆயில் போன்றவற்றை தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளால் கேன்சர் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், செய்திகள் வெளி வந்தன. இதனையடுத்து, இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி (Baddi) நகரில் உள்ள அந்நிறுவனத்தில் மருந்து பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் தயாரிப்புகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி, நவ்நீத் மர்வஹா, வெளிநாடுகளில் இருந்து வந்த செய்திகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கூடத்தின் சோதனையில் இது நிரூபணம் ஆகியிருப்பதாகவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…