Categories: இந்தியா

சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தல்..கேரள அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்…!!

Published by
Dinasuvadu desk
சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. பெண்களை அனுமதிப்பதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது, போராட்டமும் தொடர்கிறது.
போராட்டம் தொடரும் நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கோவில் வெள்ளியன்று திறக்கப்பட்டது. கேரளா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் இருமுடியுடன் குவியத் தொடங்கி உள்ளனர். அங்கு வழக்கத்திற்கு அதிகமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் குழு ஆய்வு செய்தது.
குழுவில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான திருவச்சனூர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், சபரிமலை சன்னிதானம் பகுதி இப்போது பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. பக்தர்கள் சபரிமலைக்குள் நுழைய மிகுந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதிகமான போலீஸ் குவிப்பால் வழக்கமாக வரும் பக்தர்கள் கூட்டமும் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அடூர் பிரகாஷ் பேசுகையில், “சபரிமலையில் பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் போலீஸை குவித்து கேரள அரசு அச்சுறுத்தலான சுழலை உருவாக்கியுள்ளது,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் தேசவசம் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.சிவகுமார் பேசுகையில், சபரிமலைக்கு வரும் அதிகமான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்க அரசு நடவடிக்கையை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். “ நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை  செய்து கொடுக்க அரசுக்கு விருப்பம் கிடையாது. மாறாக பக்தர்களுக்கு இடையூறு செய்வதில் நாட்டம் கொண்டுள்ளது,” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

4 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

4 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

4 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

4 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

4 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

5 hours ago