சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு இதுவரை இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, சபரிமலையில் பெண்கள் வருவதற்கான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் முற்போக்கான தீர்ப்பை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவாத அமைப்புகள் கேரள அரசுக்கு வேண்டுமென்றே நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நடிகரும், பா.ஜ.க நிர்வாகியுமான கொல்லம் துளசி கூட்டம் ஒன்றில் பேசியபோது, சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக வெட்டப்பட்டு உடலின் ஒரு பாதியை முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் முன்பும், மற்றொரு பாதியை டெல்லியிலும் வீசப்படுவார்கள் என பேசி சர்ச்சையை கிளப்பினார்.
பா.ஜ.க நிர்வாகியின் இப்பேச்சுக்கு பலதரப்பில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்ததையடுத்து அவர் தற்போது தனது பேச்சிற்காக மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், அவர்மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…