சபரிமலையில் நுழையும் பெண்கள் வெட்டி விசப்படுவார்கள் என்ற நடிகர் மீது வழக்கு பதிவு..!!

Default Image

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு இதுவரை இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, சபரிமலையில் பெண்கள் வருவதற்கான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் முற்போக்கான தீர்ப்பை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவாத அமைப்புகள் கேரள அரசுக்கு வேண்டுமென்றே நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நடிகரும், பா.ஜ.க நிர்வாகியுமான கொல்லம் துளசி கூட்டம் ஒன்றில் பேசியபோது, சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக வெட்டப்பட்டு உடலின் ஒரு பாதியை முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் முன்பும், மற்றொரு பாதியை டெல்லியிலும் வீசப்படுவார்கள் என பேசி சர்ச்சையை கிளப்பினார்.
பா.ஜ.க நிர்வாகியின் இப்பேச்சுக்கு பலதரப்பில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்ததையடுத்து அவர் தற்போது தனது பேச்சிற்காக மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், அவர்மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்