சபரிமலையில் தொடரும் போராட்டத்தால் 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி வரை நீட்டிப்பு…!!

Default Image

சபரிமலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான நடை கடந்த மாதம் 16-ம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்காக வந்ததால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே போராட்டங்களை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், 144 தடை உத்தரவை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்