சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு பெருவெள்ளமே காரணம்..! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Default Image

சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு சமீபத்தில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமே காரணம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திருவனந்தபுரத்தில்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது. சபரிமலையில் பாஜகவின் போராட்டம் முடிவுற்றதாக தெரிய வந்ததன் மூலம், நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் நிலைபாட்டை அங்கீகரிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு சமீபத்தில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமே காரணம் எனவும் முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்