சபரிமலைக்கு செல்ல மத்திய அமைச்சர் பொன்.ராதாவுக்கு அனுமதி மறுப்பு…!!

Default Image

சபரிமலைக்கு வழிபாடு செய்ய சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட இளம்பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு வழிபாடு செய்யச் சென்றார்.

அவரை நிலக்கல்லில் தடுத்து நிறுத்திய கேரள போலீஸார் தொண்டர்களுடன் பம்பைக்கு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரையும் அவருடன் வந்த தொண்டர்களையும் அரசு பேருந்தில் திருப்பி அனுப்பினர்.

DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்