சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திருநங்கைகள் 4 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்கச் சென்றனர். அவர்கள் எரிமேலி வழியாகப் பம்பைக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்குச் செல்ல முயன்றனர். அவர்களின் பெயர் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சு ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விதாரணையில் தெரியவந்தது.
முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்துள்ளதாக திருநங்கைகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். ஆனால் இவர்களை மறித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று கருதிய போலீஸார், அவர்கள் மேற்கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீஸாருடன் திருநங்கைகள் 4 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பெண் போலீஸார் சமாதானப்படுத்தி, திருநங்கைகளைப் பாதுகாப்புடன் கோட்டயம் அனுப்பி வைத்தனர்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…