சத்தீஸ்கர் மாநிலம், ஜாங்ஜிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையதிற்கு இரண்டு சன்னியாசினிகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வந்தடைந்தனர். அவர்களை அம்மாவட்டத்தில் உள்ள ஆசிரம் ஒன்றிற்கு காரில் அழைத்து செல்ல அவர்களுக்கு அறிமுகமான திலிப்சந்த் படேல் என்பவர் ரயில் நிலையம் வந்திருந்தார்.
ஆனால், ஆசிரமம் செல்வதற்கு பதிலாக குழந்தை ஒன்றின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று சன்னியாசினிகளை எமாற்றி கோர்பா மாவட்டம் செல்லும் வழியில் காரை ஓட்டி சென்றுள்ளார் படேல். அங்கு துப்பாக்கி முனையில் படேல் உள்பட மேலும் மூவர் சேர்ந்து சன்னியாசினிகளை கூட்டாக கற்பழித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டே சென்று விட வேண்டும் என சன்னியாசினிகளுக்கு அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சன்னியாசினிகளில் ஒருவர் அம்மாநில முதல்வர் ரமன் சிங்கிற்கு புகார் மனு ஒன்றை எழுதியிருந்தார்.
புகார் மனு தொடர்பாக மாநில அரசின் அறிவுறுத்தலின்படி குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…