சத்தீஷ்கரில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆயிரம் கிலோ கஞ்சா கடத்தல்..!

Default Image

சத்தீஷ்கரில் கஞ்சா கடத்தப் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் வாகனத்தையும், அதிலிருந்த சுமார் ஆயிரம் கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.Image result for கஞ்சா

கோர்பா மாவட்டத்தின் கட்கோரா பகுதியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அனைத்து விதமான வாகனங்களையும் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அதையும் போலீசார் சோதனை செய்தபோது, ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டையாக கஞ்சா வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் ஆயிரம் கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்