நேற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற மே 12-ல் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மே 15-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 3 மணி வரை நடந்தது. .
முதல் நாளான நேற்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியதும் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டினர். பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழரான அந்தோணி சந்தோஷ் நேற்று காலை முதல் ஆளாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.