Categories: இந்தியா

சச்சினின் முதல் உரை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அமளியால் தடை

Published by
மணிகண்டன்

இந்திய கிரிகெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 2012ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் அவரின் வருகை குறைபாடு காரணமாக விமர்சிக்கபட்டார். ஆனால், அவர் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளை கேட்டு உள்ளார். சமூக நலனுக்காக பாராளுமன்ற உறுப்பினராக அவர் துறையில் ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதம் பயன்படுத்தி உள்ளார்.

அவர் இன்று முதன் முதலாக பாராளுமன்றத்தில், விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் என்கிற தலைப்பில் பேச ஆரம்பித்தார். ஆனால் அவர் பேசிய சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் தரப்பு, மன்மோகன் சிங் பற்றி பிரதமர் கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் இங்கு வர வேண்டும் எனவும் கூறினர். இதனால் சச்சின் பேச்சு தடைபட்டது.

மேல்சபை தலைவர் வெங்கய்யா நாயுடு காங்கிரஸ் தரப்பு எம்.பி.க்களை அமைதிப்படுத்த பல முறை முயன்றார், அவர்களது ஆர்ப்பாட்டங்கள் பதிவு செய்யப்பட போவதில்லை என அவர் கூறினார். பாரத ரத்னா விருதுக்கு மரியாதை காட்டும்படி கேட்டுக் கொண்டார்.

இருந்தாலும் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சச்சினின் முதல் உரை தடைபட்டது. சபை ஒத்திவைக்கபட்டதை தொடர்ந்து , முன்னாள் நடிகையும் ராஜ்ய சபை எம்பியுமான ஜெயாபாச்சன், சச்சின் பேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கவில்லை இது, ஒரு அவமனகரமான விஷயம் என்று கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

5 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

11 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

12 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

17 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago