கோழைகளால் கீழ்படிய செய்ய முடியாது ‘ரைசிங் காஷ்மீர்’ முதல் பக்கத்தில் பத்திரிக்கையாளருக்கு அஞ்சலி..!

Default Image
ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையின் தலைமை பத்திரிக்கை ஆசிரியர் ஷுஜாத் புகாரி நேற்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதற்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் ஷுஜாத் புகாரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது.
பத்திரிக்கை வெளியிட்டு உள்ள அஞ்சலி செய்தியில், “நீங்கள் எங்களை திடீரென விட்டுச் சென்றுள்ளீர்கள், ஆனால் நீங்கள் எப்போதும் உங்களுடைய தொழில் பக்தி மற்றும் முன்மாதிரியான தைரியம் ஆகியவற்றுடன் எங்களுக்கு எப்போதுமே வழிகாட்டியாக இருந்து வழிநடத்துவீர்கள். எங்களைவிட்டு உங்களை பறித்துக்கொண்ட கோழைகளால் நம்மை கீழ்படிய செய்ய முடியாது. கடினமான நிலையை எதிர்க்கொள்ள வேண்டியது இருந்தாலும், உண்மையை சொல்ல வேண்டும் என்பதில் உங்களுடைய கொள்கையை நாங்கள் கொண்டிருப்போம், உங்களுடைய ஆத்மா சாந்தியடையட்டும்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்