கைகளை மூடி தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் : அமித்ஷா..!

Default Image
சென்னையில்  பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது  அமித்ஷா பேசியதாவது- கைகளை மூடி தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என அனைவரும் நினைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை தாக்கினர். மேலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். தமிழகத்தின் நிலை மாறும். தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல் கேலி செய்தார்கள். மார்ச் மாதத்துக்குள் பாஜக எங்கு இருக்கிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
 2014-ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். பொன்.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்த தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியில் இந்தியாவில் பல மாற்றங்கள் வந்துள்ளன எனவும் , மேலும் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளதாகவும் கூறினார். அரசின் மக்கள் சேவையினால் பாஜக மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. 10 கோடி ஏழைகளின் ஆசைகளை பூர்த்தி செய்தது பாஜக அரசு. 70 ஆண்டுகளில் முந்தைய அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்து இருக்கிறது.
பாஜகவிற்கு 330 -க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் உள்ளனர். 2019 நடாளுமன்ற தேர்தலில் பாஜக வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும்.11 கோடி உறுப்பினர்களுடன்  மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்குகிறது. முந்தைய அரசுகளை விட தமிழகத்திற்கு அதிக நிதியை பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும். மேலும் பல திட்டங்கள் கொண்டுவர இருக்கிறது பா.ஜ.க. அரசு. என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்