சபரிமலை விவகாரம் குறித்து, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் கருத்துகள் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என பொருள்படும் வகையில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை எதிர்த்து, பீகார் மாநிலம் சீதாமர்கியில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமித்ஷாவின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், பெண்களின் உணர்வுகளை கடுமையாக அவமதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கலவரத்தை தூண்டுதல், குற்ற செயலுக்கு திட்டமிடுதல், வழிபாடு தலம் செல்ல விரும்புவர்களை தனது பேச்சால் கொச்சைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அமித்ஷா மீது வழக்குத்தொடர வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.
dinasuvadu.com
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…