கேரள அரசின் அதிரடி…அமித்ஷா மீது வழக்கு…உச்சத்தை எட்டும் ஐயப்பன் கோவில் விவகாரம்…!!

Default Image

சபரிமலை விவகாரம் குறித்து, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் கருத்துகள் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என பொருள்படும் வகையில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை எதிர்த்து, பீகார் மாநிலம் சீதாமர்கியில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமித்ஷாவின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், பெண்களின் உணர்வுகளை கடுமையாக அவமதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கலவரத்தை தூண்டுதல், குற்ற செயலுக்கு திட்டமிடுதல், வழிபாடு தலம் செல்ல விரும்புவர்களை தனது பேச்சால் கொச்சைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அமித்ஷா மீது வழக்குத்தொடர வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்