கேரளா முழுவதும் ரெட் அலெர்ட் …!23 பேர் பலி!மீண்டும் பீதியில் கேரளா …!

Default Image

கேரளாவில் மழைவெள்ளம் ஏற்படுத்திய சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய்கள் பரவி வருகின்றது.

கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகினர்.

மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

Image result for Rat Fever Kerala RedAlert

அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழை நின்று விட்ட்து.
இந்நிலையில் கேரளாவில் மழைவெள்ளம் ஏற்படுத்திய சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கேரள சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது. இதனால், சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்