கேரளாவை புரட்டி போட்ட வெள்ளம் …!இன்று திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்…!கேரள அரசு அழைப்பு
வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.இன்று மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
DINASUVADU