சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா விஎச்பியின் துணை அமைப்பான சூர்யா காயத்திரியில் சேர்ந்து அத்வைத வேதம் கற்றவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சங்பரிவாரால் திட்டமிடப்படும் வன்முறைக்கு பெண்களையே இரையாக்குவது அம்பலமாகி உள்ளது.
ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல சில பெண்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை மறைமுகமாக தொடுத்த சங்பரிவார் அமைப்புகளே தங்களது செல்வாக்கின் கீழ் உள்ள பெண்களை அனுப்பி கேரள இடது ஜனநாயக முன்னணிக்கு எதிரான பொய் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ரெஹானா சபரிமலை செல்ல பாஜகவினர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ரெஹானா பலமுறை கேரள பாஜக பிரமுகர் சுரேந்திரன் என்பவரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெஹானா விவகாரத்தில் பாரதியஜனதா பின்புலம் இருப்பதாக குற்றம் சாட்டுப்பட்டு உள்ளது. இதை ரெஹானா பாத்திமா உறுப்பினராக உள்ள கிஸ் ஆஃப் லவ் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் ரெஹானா விசுவஇந்த பரிஷத்தின் துணை அமைப்பான சூர்ய காயத்திரி என்ற அமைப்பின் உறுப்பினர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பில் சேர்ந்து ரெஹானா அத்வைதம் குறித்து படித்து வந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு ரெஹானா இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி இந்து மதத்திற்கு மாறியதாகவும், ஆனால் அவர் தனது பெயரை மாற்றவில்லை என்றும் ரெஹானா பல ஆண்டுகள் வேதபாடம் படித்து வந்ததாக அவரது கணவர் மனோஜ் கூறியுள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…