கேரளாவில் பிஜேபி_யின் திட்டம் அம்பலம்…கோவிலுக்குள் சென்ற பெண்கள் பிஜேபி ஆதரவாளர்…

Default Image

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா விஎச்பியின் துணை அமைப்பான சூர்யா காயத்திரியில் சேர்ந்து அத்வைத வேதம் கற்றவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சங்பரிவாரால் திட்டமிடப்படும் வன்முறைக்கு பெண்களையே இரையாக்குவது அம்பலமாகி உள்ளது.
ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல சில பெண்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை மறைமுகமாக தொடுத்த சங்பரிவார் அமைப்புகளே தங்களது செல்வாக்கின் கீழ் உள்ள பெண்களை அனுப்பி கேரள இடது ஜனநாயக முன்னணிக்கு எதிரான பொய் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.வெள்ளியன்று சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழைய முயன்ற கவிதா என்ற பெண் செய்தியாளர் மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த ரெஹானா பாத்திமா ஆகியோர் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
ரெஹானா சபரிமலை செல்ல பாஜகவினர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ரெஹானா பலமுறை கேரள பாஜக பிரமுகர் சுரேந்திரன் என்பவரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெஹானா விவகாரத்தில் பாரதியஜனதா பின்புலம் இருப்பதாக குற்றம் சாட்டுப்பட்டு உள்ளது. இதை ரெஹானா பாத்திமா உறுப்பினராக உள்ள கிஸ் ஆஃப் லவ் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் ரெஹானா விசுவஇந்த பரிஷத்தின் துணை அமைப்பான சூர்ய காயத்திரி என்ற அமைப்பின் உறுப்பினர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பில் சேர்ந்து ரெஹானா அத்வைதம் குறித்து படித்து வந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு ரெஹானா இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி இந்து மதத்திற்கு மாறியதாகவும், ஆனால் அவர் தனது பெயரை மாற்றவில்லை என்றும் ரெஹானா பல ஆண்டுகள் வேதபாடம் படித்து வந்ததாக அவரது கணவர் மனோஜ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்