கேரளாவில் கனமழை : 7 பேர் உயிரிழப்பு ..!
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி அருகே கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிப்பரா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 4 பேர் மண்ணுக்குள் புதைந்து பலியாகினர். நிலச்சரிவில் சிக்கிய மேலும் 10 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
தகவலறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இறந்தவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவித்ததுடன், தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவரை உறுப்பினராகக் கொண்ட அவசர நிவாரண நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.