கேப்டன் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’ வழங்கிய குடியரசுத்தலைவர்!

Published by
Edison

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி,ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில்,40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.அவ்வாறு,நடந்த வான்வழித் தாக்குதலின் போது பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.ஆனால்,அதன்பின்னர்,அவரது விமானம் எதிரிப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு,பாராசூட் மூலம் உயிர் தப்பிய அவர் பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தன் அப்போது விங் கமாண்டராக இருந்தார்.

இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு,அபிநந்தன் அவர்களை பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.இதன்மூலம் மக்கள் மத்தியில் அபிநந்தன் மிகவும் பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து,அபிநந்தன் அவர்களுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில்,பிப்ரவரி 27, 2019 அன்று வான்வழிப் போரின் போது பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago