கேப்டன் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’ வழங்கிய குடியரசுத்தலைவர்!

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி,ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில்,40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து,புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.அவ்வாறு,நடந்த வான்வழித் தாக்குதலின் போது பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.ஆனால்,அதன்பின்னர்,அவரது விமானம் எதிரிப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு,பாராசூட் மூலம் உயிர் தப்பிய அவர் பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தன் அப்போது விங் கமாண்டராக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு,அபிநந்தன் அவர்களை பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.இதன்மூலம் மக்கள் மத்தியில் அபிநந்தன் மிகவும் பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து,அபிநந்தன் அவர்களுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில்,பிப்ரவரி 27, 2019 அன்று வான்வழிப் போரின் போது பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
Delhi: Wing Commander (now Group Captain) Abhinandan Varthaman being accorded the Vir Chakra by President Ram Nath Kovind, for shooting down a Pakistani F-16 fighter aircraft during aerial combat on February 27, 2019. pic.twitter.com/vvbpAYuaJX
— ANI (@ANI) November 22, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025