குட்நியூஸ்…பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ .1.31 கோடி ஒப்புதல் – மத்திய அரசு அறிவிப்பு..!

Published by
Edison

பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு(ஊட்டச்சத்து) மத்திய அரசு ரூ .1.31 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 11.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் PM-POSHAN திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் மற்றும் இத்திட்டத்திற்காக சுமார் ரூ.1.31 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.பிஎம் -போஷன் (PM POSHAN) திட்டம் பள்ளிகளில் தற்போதுள்ள மதிய உணவு திட்டத்தை உட்படுத்தும். இத்திட்டம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படும்.இருப்பினும், மத்திய அரசு முக்கிய பங்களிப்பாளராக இருக்கும்.

மதிய உணவு திட்டம் மறுபெயரிடப்பட்டது:

பள்ளிகளில் மதிய உணவுக்கான தேசிய திட்டம் ‘பள்ளிகளில் பிஎம் -போஷன்(PM POSHAN) தேசிய திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் நாடு முழுவதும் 11.20 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 11.80 கோடி மாணவர்களை உள்ளடக்கும்.

இதற்காக,மத்திய அரசிடம் இருந்து ரூ .54 ஆயிரம் கோடி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ரூ .31,733.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,உணவு தானியங்களுக்காக ரூ .45,000 கோடி கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்கும்.

மேலும்,மத்திய அமைச்சகம் ‘திதிபொஜன்’ என்ற கருத்தை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.அந்த வகையில்,குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் தோட்டக்கலை பற்றிய அனுபவத்தை வழங்குவதற்காக பள்ளிகளில் பள்ளி ஊட்டச்சத்து திட்டங்களை அரசாங்கம் ஊக்குவிக்கும்.

அதுமட்டுமல்லாமல்,இரத்த சோகை அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு உதவும் என்று கூறப்படுகிறது.இதற்காக,ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

5 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

10 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

15 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

37 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

54 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago