குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜா, தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி, யோகா பயிற்சியாளர் நானாம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், பத்ம விருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இசைஞானி இளையராஜாவுக்கு, குடியரசு தலைவர் பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த உஸ்தாத் இசைக்கலைஞர் உஸ்தாத் குலாம் முஸ்தஃபாகானுக்கும், கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், கல்வியாளருமான பரமேஸ்வரனுக்கும், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் முதல் தொல்லியல் துறை இயக்குநரும், கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞருமான ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 98 வயதான மிக மூத்த யோகா பயிற்சியாளரான நானாம்மாளுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவம் சேர்த்தார்.
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க வழிகாட்டிய, மதுரை தியாகராய கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ் வர்மன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…