Categories: இந்தியா

குஜராத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்…

Published by
Dinasuvadu desk

குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் இரவோடு இரவாக கூட்டம் கூட்டமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பொது இடங்களில் வைத்து இவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வீடியோக்களாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அகமதாபாத், பதான், சபர்கந்தா, மேசானா போன்ற மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் பின்பு போராட்டங்கள் தாக்குதல் வரை சென்றன. பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இந்நிலையில், இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா கூறுகையில்,’14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரணத்தினால், வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிகரித்து வருகிறது.
ஒருவர் தவறு செய்த காரணத்தினால், ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தவறானவர்கள் என்று எண்ணுவது தவறு. தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல்களில் தாகூர் சேனா அமைப்பினர் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

40 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

44 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago