Categories: இந்தியா

கிணற்றில் இறங்கிய வாலிபர் வி‌ஷவாயு தாக்கி பலி..!

Published by
Dinasuvadu desk

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா பல்லசேனையை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கண்ணன் (வயது 42). இவர் இன்று காலை அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க புறப்பட்டார்.

வரும்வழியில் ஒரு பாதுகாப்பற்ற கிணறு இருந்தது. அதை எட்டிப் பார்த்தபோது கிணற்றில் ஒரு ஆடு செத்து மிதந்தது. கிணற்றில் இறங்கி ஆட்டை மீட்டால் கறி கிடைக்கும் என்று நினைத்த கண்ணன் இது குறித்து தனது நண்பருக்கு தெரிவித்தார். அவரது நண்பரும் வந்தார்.

கிணற்று மேட்டில் நண்பர் நின்று கொண்டு ஆட்டின் உடலை கயிறு மூலம் இழுக்க தயாரானார். 30 அடி அழமுள்ள கிணற்றில் 5 அடி அழத்திற்கு தண்ணீர் இருந்தது.

இந்நிலையில் கண்ணன் கிணற்றில் கயிறு மூலம் இறங்க தொடங்கினார். 20 அடி அழத்திற்கு சென்றதும் கண்ணனை வி‌ஷவாயு தாக்கியது. இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. என்னால் முடியவில்லை என்று கிணற்றில் இருந்து அபாய குரல் எழுப்பினர். முடியவில்லை என்றால் வந்து விடு என்று நண்பர் கூறினார்.

ஆனால் திடீரென கண்ணன் கிணற்றுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர் இது குறித்து சித்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago