காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தம் நீட்டிப்பு இல்லை என்றும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரம்ஜான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்ததற்கு, காஷ்மீர் மக்கள் மீதான அன்பும், அக்கறையுமே காரணம் என்று குறிப்பிட்டார். ரம்ஜான் நேன்பை அமைதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அமைதியான சூழல் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடர பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவு பிறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
சண்டைநிறுத்த காலத்தில் தீவிரவாதிகள் 60க்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்களை அரங்கேற்றி உள்ளனர். எல்லைப் பகுதியில் வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்ட 24 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டைகளில் பாதுகாப்புப் படையினர் 9 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 6 பேரும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்..
இதனிடையே, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 35 தீவிரவாதிகள் பூஞ்ச், ஜம்மு மற்றும் நவ்காம் பகுதிகளில் ஊடுருவத் தயாராக இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 450 தீவிரவாதிகள் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. போர்நிறுத்தத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் தங்கள் பலத்தை பெருக்கிக் கொண்டுள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…