ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயன்ற நிலையில், சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த காஷ்மீரில், இரு கட்சிகள் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு, ஆதரவு அளிப்பதாக பிரதான எதிர்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை அறிவித்தன. இதனால் ஆட்சி அமைக்க உரிமைகோரி மெகபூபா முப்தி, ஆளுநருக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார்.
ஆனால் அந்த கடிதத்தை ஆளுநர் மாளிகை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தொலைப்பேசி மூலமாக ஆளுநரை தொடர்பு கொள்ள முயன்றும், முடியவில்லை என மெகபூபா தெரிவித்தார். இந்நிலையில் சஜ்ஜாத் லோன் என்பவர் பா.ஜ.க. ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க உள்ளதாக ஆளுநரிடம் உரிமை கோரினார். இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக, சட்டப்பேரவையை கலைப்பதாக ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவிப்பை வெளியிட்டார்.
குதிரை பேரத்தை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இது ஜனநாயக படுகொலை என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
dinasuvadu.com
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…