காவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு!

Default Image

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றும்  நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது  என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டாலும் அதற்கு அவகாசம் வேண்டும்.

முன்னதாக  இருமாநிலங்களின் பாதுகாப்பும் இயற்கையின் கையில் தான் உள்ளது, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு நீர் வழங்கப்படும் என்று   கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என்று மதுரையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டியளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,கர்நாடகா-தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது. கடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என்று மதுரையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்