காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக கர்நாடகம் புதிய முடிவு..!

Default Image

கர்நாடக மாநில எம்.பிக்கள் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது, என  முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சமீபத்தில் விவாதித்த கர்நாடக அரசு, அடுத்தக்கட்டமாக கர்நாடக மாநில எம்.பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டியது.

முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யக்கூடாது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்