காவிரி ஆணையத்திற்கான உறுப்பினர் பெயரை பரிந்துரைக்குமாறு கர்நாடகாவிற்கு மத்திய அரசு கடிதம்..!

Default Image

காவிரி ஆணையத்திற்கான உறுப்பினர் பெயரை பரிந்துரைக்குமாறு கர்நாடகாவிற்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகள் பட்டியலை மத்திய நீர்வளத்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவைத்தன. இதையடுத்து, காவிரி ஆணையத்தில் பங்காற்றக்கூடிய உறுப்பினர் பெயரை நேற்றைக்குள் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சஞ்சய் குண்டு அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரி ஆணையத்திற்கு பணியாற்றும் பிரதிநிதிகள் பட்டியலை மேலும் காலதாமதம் செய்யாமல் அனுப்பி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவின் காலதாமதத்தால் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்