காவிரியின் குறுக்கே மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி .இந்த பட்ஜெட்டில் முதல்கட்டமாக 2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.
மேலும் இந்திரா கேண்டீனை விரிவுபடுத்தவும் அறிவிப்பை வெளியிட்டார்.இது குறித்த அறிவிப்பில் புதிதாக 247 இந்திரா கேண்டீன் திறக்கப்படும்.இது கர்நாடகாவில் உள்ள அனைத்து தாலுகாக்கள் ,மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் திறக்கப்படும்.ரூ.211 கோடி செலவில் இவை புதிதாக திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ரூ.25,000 வரை விவசாய கடன் செலுத்தி இருந்தால் திருப்பி அளிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
பின்னர் பெங்களூருவின் தண்ணீர் தேவைக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…