காவிரியின் குறுக்கே  புதிய அணை!சட்டப்பேரவையில்  கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடி அறிவிப்பு

Default Image

காவிரியின் குறுக்கே  மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி .இந்த பட்ஜெட்டில் முதல்கட்டமாக 2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.

மேலும் இந்திரா கேண்டீனை விரிவுபடுத்தவும் அறிவிப்பை வெளியிட்டார்.இது குறித்த அறிவிப்பில் புதிதாக 247 இந்திரா கேண்டீன் திறக்கப்படும்.இது கர்நாடகாவில் உள்ள அனைத்து தாலுகாக்கள் ,மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் திறக்கப்படும்.ரூ.211 கோடி செலவில் இவை புதிதாக திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ரூ.25,000 வரை விவசாய கடன் செலுத்தி இருந்தால் திருப்பி அளிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

பின்னர் பெங்களூருவின் தண்ணீர் தேவைக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்