காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு..!

Default Image
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் லஸ்சிபோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த சில பயங்கரவாதிகள் காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் கையெறி குண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்