இந்தியாவின் சாய்னாநேவால் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவருடன் மோதிய பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டில், இந்தியா மிகப்பெரிய பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. கடைசி நாளான இன்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால், 21க்கு 18, 23க்கு 21 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்துவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் வெற்றிப்பெற்றார்.
நேற்று ஒரே நாளில், 8 தங்கம் உட்பட 17 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் வலுவாக நீடிக்கிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…