கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சிக்கே தான் கடன்பட்டிருப்பதாகவும், கர்நாடகத்தின் ஆறரை கோடி மக்களுக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். மாநிலத்தின் நிதிநிலைமையை புரிந்துகொண்டு, அந்த முடிவை எடுப்பதற்கு குறைந்தது ஒரு வார காலம் தேவை என்றும் அவர் கூறினார்.
கடன் தள்ளுபடி அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகே சாத்தியம் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார். விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட முடியவில்லை எனில் தாமே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்றும், எனவே ராஜினாமா செய்யுமாறு யாரும் கோரவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முடிவுகளை உடனே எடுப்பதற்கு, தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை வழங்குமாறு தான் கேட்டதாகவும், அவ்வாறு கிடைக்காததால் காங்கிரசின் கருணையை சார்ந்திருக்கும் நிலை உருவாகியிருப்பதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…