காங்கிரஸ் துதி பாடிய கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி!எங்களுக்கு காங்கிரஸ் தான் பர்ஸ்ட்!மக்கள் எல்லாம் நெக்ஸ்ட்!

Default Image

கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சிக்கே தான் கடன்பட்டிருப்பதாகவும், கர்நாடகத்தின் ஆறரை கோடி மக்களுக்கு அல்ல என்று  கூறியுள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். மாநிலத்தின் நிதிநிலைமையை புரிந்துகொண்டு, அந்த முடிவை எடுப்பதற்கு குறைந்தது ஒரு வார காலம் தேவை என்றும் அவர் கூறினார்.

கடன் தள்ளுபடி அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகே சாத்தியம் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார். விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட முடியவில்லை எனில் தாமே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்றும், எனவே ராஜினாமா செய்யுமாறு யாரும் கோரவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முடிவுகளை உடனே எடுப்பதற்கு, தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை வழங்குமாறு தான் கேட்டதாகவும், அவ்வாறு கிடைக்காததால் காங்கிரசின் கருணையை சார்ந்திருக்கும் நிலை உருவாகியிருப்பதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்