Categories: இந்தியா

காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும்…சித்தராமையா

Published by
Dinasuvadu desk
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நான் கூறினேன். அதே போல் ஜமகண்டி தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று நான் சொன்னேன். ஏறக்குறைய அதே போல் எங்கள் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களின் மனநிலையை நான் சரியாக கணித்துள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் மனநிலை பா.ஜனதாவுக்கு எதிராக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) புனிதமற்ற கூட்டணியை அமைத்துக்கொண்டதாக பா.ஜனதா தொடர்ந்து கூறியது. காங்கிரஸ் எம்.எல்.சி.யின் மகனை பா.ஜனதாவுக்கு அழைத்து சென்றது புனிதமானதா?. பா.ஜனதாவுக்கு கொள்கை கிடையாது. ஆட்சி அதிகாரத்திற்காக அந்த கட்சியினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.இவ்வாறு சித்தராமையா கூறினார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago