ரபேல் விவகாரத்தில் அவதூறு பரப்பி வரும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் விமானங்களின் விலைகள் பொது கணக்கு தணிக்கை குழுவிடம் தெரிவிக்கப்பட்டு, அதனை நாடாளுமன்ற கணக்குக் குழு ஆய்வு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியதை சுட்டிக்காட்டி இருந்தது.
ரபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆன, ரபேல் விமான ஒப்பந்தத்தில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல் அளித்துவிட்டதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பி வரும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளைஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…