Categories: இந்தியா

காங்கிரசுடன் கூட்டணி இல்லை..திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு….

Published by
Dinasuvadu desk
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் காங்கிரசுடன் கூட்டணி சேர மாட்டோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டணி தொடர்பாக தீர்மானிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2019- பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து மாநிலங்களை கட்சிகளும் காங்கிரசுடன் கரம்கோர்க்க தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டங்களில் மேற்கு வங்காளம் மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சிலமுறை பங்கேற்றுள்ளார். எனினும், மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள 42 பாராளுமன்ற தொதிகளிலும் பா.ஜ.க.வை எதிர்த்து நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம் என்று முன்னர் மம்தா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு வங்காளம் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி, தற்போதைய நிலையில் பா.ஜ.க.வை வீழ்த்த என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து பாராளுமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்வோம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அனைவருடனும் ஆலோசனை செய்து கூட்டணி தொடர்பான எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
இவரது கருத்து பதில் அளித்துள்ள அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அப்துல் மன்னான், ‘எங்களுடன் கூட்டணி வைத்துகொள்ளுமாறு உங்களை யார் அழைத்தார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். திரிணாமுலுடன் முன்னர் நாங்கள் வைத்த கூட்டணிக எல்லாமே பேரழிவாகவே வாய்த்தது. இந்த மாநிலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய திரிணாமுல் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ள அவர், நாங்களும் தனியாகவே தேர்தலை சந்திக்க விரும்புகிறோம் தெரிவித்துள்ளார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

13 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

13 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

13 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

13 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

14 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

14 hours ago