காஷ்மீரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ,இளைஞர்கள் வீசியெறியும் ஒவ்வொரு கல்லும், கையில் எடுக்கும் ஆயுதமும் மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். லே நகருக்குச் சென்ற அவர், 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் லே- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் அமைய உள்ள 14 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை பணிகளையும் தொடங்கி வைத்தார். பனிக்காலங்களில் லே-லடாக் இடையிலான பாதை மூடப்படுவதால் இந்த சுரங்கப்பாதை நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க உதவும் என்றும் அப்போது பிரதமர் பேசினார்.
காஷ்மீரில் ராணுவத்தினர் மீது இளைஞர்கள் கல்வீசுவதைக் கண்டித்த மோடி, வழிதவறிய இளையவர்களை குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் நல்வழிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இளைஞர்கள் வீசியெறியும் ஒவ்வொரு கல்லும், கையில் ஏந்தும் ஒவ்வொரு ஆயுதமும் அவர்களைத்தான் காயப்படுத்தும் என்றும் மோடி எச்சரித்தார். ரமலான் நோன்பை முன்னிட்டு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, கடந்த முறை தீபாவளிக்கு தாம் காஷ்மீர் வந்ததாகவும் இந்த முறை ரமலானுக்குமுன்பு காஷ்மீர் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புத்தமத தலைவரான 19-வது குஷோக் பக்குலா ரிம்போச் சேவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீநகர் வந்த மோடி, அங்கு கிஷண்கங்கா நீர் மின்நிலையத்தை அவர் திறந்து வைத்தார். ஸ்ரீநகர் வட்டச்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் வைஷ்ணவ தேவி மலைக்கோவிலுக்கு இழுவை விஞ்ச் சேவைக்கான திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…