கலெக்டர் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி செம்மரம் கடத்தல்..!

Default Image

திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து கல்யாணி அணைக்கட்டு மற்றும் அதன் அருகில் உள்ள லோடிங் பாயிண்ட், சந்திரகிரி புறவழிச்சாலை ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புற வழிச்சாலையில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு கார் செல்வதைக் கண்டனர். அதன் எண்ணை உடனடியாக மற்ற குழுவினரிடம் தெரிவித்தனர்.

அந்த காரில் லோடிங் பாயிண்டில் செம்மரக் கட்டைகளை ஏற்றிச் செல்வதை கவனித்தனர். இதையடுத்து காரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.

ஆனால் டிரைவர் காரை வேகமாக ஓட்டி போலீஸ் வாகனத்தின் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே சுதாரித்த போலீசார் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து காரை மடக்க முயன்றனர். போலீசார் சுற்றி வளைத்ததை உணர்ந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி விட்டார்.

இதையடுத்து போலீசார் அந்தக் காரையும், அதிலிருந்த 5 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

காரின் நம்பர் பிளேட்டில் இருந்த எண்ணை சரிபார்த்ததில் அந்த எண் கலெக்டருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டரின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி செம்மரக்கட்டைகளை அதில் கடத்தி வந்துள்ளனர்.

இதே போல் பல அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் கார் எண்ணை கடத்தல் காரர்கள் பயன்படுத்தி இருக்கலாம்.

இனி கூடுதல் கவனத்துடன் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்