நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்து, முதலமைச்சராக குமாரசாமி கடந்த மாதம் 23-ஆம் தேதி பதவி ஏற்றார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக கடந்த ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி .இந்த பட்ஜெட்டில் முதல்கட்டமாக 2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.
இதன் பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைமை அலுவலகமான பெங்களூருவில் கட்சியின் செயல்வீரர்கள் சார்பில் முதலமைச்சர் ,எம்எல் எக்கள்,அமைச்சர்களுக்கு பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பங்கேற்று பேசினார்.அப்போது பேசிய அவர்,நான் முதல்வராகி விட்டேன் உங்களில் ஒரு சகோதரன் எண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்,ஆனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
முதல்வராக கூட்டணி ஆட்சியில் இருப்பது எவ்வளவு மனவேதனை என்று எனக்குமட்டும்தான் தெரியும்.இனியும் நான் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.கூட்டணி ஆட்சியில் இருந்து வரும் வலியை விஷம் போல உட்கொண்டுள்ளதாக கூறினார்.இதை கூறியதும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனால் என் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும் ஆண்டவன் அனுமதிக்கும் வரை பதவியில் இருப்பேன்.மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கண்கலங்கி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…