விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி திட்டமிட்டபடி, பாஜ சார்பில் நாளை பந்த் நடத்தப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக, மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது விவசாய கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என குமாரசாமி தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து, 28ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என கூறியிருந்தார்.
தேர்தல் ரத்து செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நாளை தேர்தல் நடப்பதால், பந்த் நடைபெறாது என தகவல் வெளியாகின. இதை மறுத்துள்ள எடியூரப்பா, திட்டமிட்டபடி நாளை பந்த் நடைபெறும் என தெரிவித்தார். இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், ‘‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் பதவிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்த பந்த்தில் பாஜவினர் மட்டுமின்றி விவசாயிகளும் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.
விவசாயிகளுக்கு நாங்கள் எப்போது உறுதுணையாக இருப்போம். ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் நாளை தேர்தல் நடக்கிறது. எனவே, பெங்களூருவை தவிர்த்து மாநிலம் முழுவதும் திட்டமிட்டபடி நாளை பந்த் நடைபெறும். ராஜ ராஜேஸ்வரி நகரில் பாஜ வெற்றிபெறும்’’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…