Categories: இந்தியா

கர்நாடகவில் இலாகா ஒதுக்கீடு..!மஜத-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இழுபறி..!!

Published by
kavitha

கர்நாடகாவில் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடிக்கும் நிலையில், சுயமரியாதையை விட்டு பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் துணை முதலமைச்சர் உள்பட 22 அமைச்சர் பதவியிடங்களை அளிக்க குமாரசாமி முன்வந்தபோதும், எந்தெந்தத் துறைகளை யாருக்கு ஒதுக்குவது என்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக சோனியா மற்றும் ராகுலை சந்திக்கப் போவதில்லை தெரிவித்த அவர், தமது அரசுக்கு எந்த நெருக்கடியும் என்றும் கூறினார். பிரச்சனையைத் தீர்க்க தாம் முயன்று வருவதாகவும், அதே நேரத்தில் சுய மரியாதையை விட்டுக்கொடுத்து விட்டு பதவியில் நீடிக்க முடியாது என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

முன்னதாக, குமாரசாமியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, மாநிலச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றனர். நேற்று மாலை ராகுல்காந்தியை சந்தித்து இலாகா ஒதுக்கீடு குறித்து விவாதித்தபோதும், முடிவு எதுவும் எடுக்கப்படாததால் அவருடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க குமாரசாமி நேரம் கோரியதை அடுத்து, நாளை காலை 11.30 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago