கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மடிகேரி, குடகு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் மொத்த உயரமான 84 அடியில் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு நாளை இரவுக்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் கனமழை பரவலாக தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பி அங்கிருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும். அப்படி திறக்கப்பட்டால் காவிரியில் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.
சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச்…
கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376…
சென்னை -குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…