Categories: இந்தியா

கன்னியாஸ்திரியை பலாத்கார விவகாரம்: அரசின் தயக்கம் ஏன்? எதிர்க்கட்சிகள் கேள்வி..!!

Published by
Dinasuvadu desk

கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த பேராயரை கைது செய்ய கேரள அரசு தயக்கம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Image result for கன்னியாஸ்திரியை பலாத்காரம்

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி புகாரில், 80 நாட்களாகியும், எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொச்சியில், கன்னியாஸ்திரிகளைக் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில், கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினரின் போராட்டம் தொடர்ந்து 8-வது நாளாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கன்னியாஸ்திரி பலாத்கார விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பேராயரைக் கைது செய்வது தொடர்பாக, காவல்துறை முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பேராயர் நேரில் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என பேராயர் பிராங்கோ மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பேராயர் பிராங்கோவைக் கைது செய்ய மாநில அரசு தயக்கம் காட்டுவதாக கேரள எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக, வாடிகனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ள நிலையில், போப் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி மாதம் விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

DINASUVADU 

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago