கத்துவா பாலியல் வழக்கு: வழக்கு வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் ! உச்சநீதிமன்றம்

Default Image

உச்சநீதிமன்றம்,கத்துவா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு, ஜம்முக்கு வெளியே மாற்றப்பட வாய்ப்புள்ளதாக,  கோடிட்டு காட்டியுள்ளது. காஷ்மீரில் வழக்கு நடந்தால், வழக்கறிஞர்களின் வாதத்துக்கோ, காவல்துறையினரின் விசாரணைக்கோ குறுக்கீடு ஏற்படலாம் என்று இந்திய பார் கவுன்சில் கவலை தெரிவித்திருந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது. வழக்கு நியாயமாக நடக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதியும், தேவைப்பட்டால் வழக்கு காஷ்மீருக்கு வெளியேற மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே, ஜனவரி 10ஆம் தேதி, 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்