கதுவா சிறுமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கைக்கு எதிர்ப்பு விவகாரம்!வழக்கறிஞர்கள் பட்டியலை தாக்கல் செய்யுமாறு இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவு !

Default Image

உச்சநீதிமன்றம்,கதுவா சிறுமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் பட்டியலை தாக்கல் செய்யுமாறு இந்திய பார் கவுன்சிலுக்கு  உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் வழக்கறிஞர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்துவது வழக்கறிஞர்களின் உரிமை என்றாலும், சட்டப்பணிகளை தடுத்து நிறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற நீதிபதிகள், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்